யாழ்ப்பாணம் தொல்பொருட் காட்சிசாலை யாழ்ப்பாணத்தில் நல்லூர் நகரில் அமைந்திருக்கின்றது. இது 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் மேற்பார்வையில் இந்தத் தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது என்பதோடு, தற்போதைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் ஆக்ககரமானமுயற்சிகளினால் தொல்லியல் அகழாய்வுப் பொருட்கள் இங்கு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் நடவடிக்கைகள் சீராகச் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, யாழ்ப்பாணம் நல்லூரில் இருக்கும் இந்தத் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்குப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் அழைத்துச் சென்றிருந்தார். போருக்குப் பின்னான சூழலில், யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கையின் மரபுரிமை சிறப்புக்களைக் கூறும் அரும்பொருள்கள் இங்கு பாதுகாக்கப்பட்டிருக்கும் சூழலை நேரில் சென்று காணும் அனுபவம் கிட்டியது. வெளியிலிருந்து காணும்போது மிகச்சாதாரணமான எளிய கட்டிடத்திலேயே இந்த அருங்காட்சியகம் இருக்கின்றது என்பதைக் காணலாம். ஆயினும், இதில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் அரும்பொருட்கள் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவன.
விதம் விதமான அலங்காரச் சங்குகள், பனையோலை கீற்றினாலும், எலுமிச்சை மரத்தின் வேரினாலும் செய்யப்பட்ட அலங்கார விசிறிகள், பல்வேறு வடிவங்களிலான மண்பாண்டங்கள் போன்றவற்றை இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு வாய்களைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்ட மண்பானை ஒன்று இங்கு உள்ளது. இது ஒரு வகையான இசைக்கருவி என்ற தகவல் அங்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நாகர்கள் பண்பாட்டினை விளக்கும் சான்றாக, நாகங்கள் பொறிக்கப்பட்ட பண்டைய சின்னங்களின் சேகரிப்புக்களும், மரத்தினால் ஆன அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த காசுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி. 16லிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த கண்டி பேரரசின் வெள்ளிக்காசுகள், அரச சின்னம் அழுத்திச் செதுக்கப்பட்ட வெள்ளிக்காசுகள், பண்டைய சேரர் கால நாணயங்கள், கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜசோழன் காலத்தில் தயாரிக்கப்பட்டு புழக்கத்திலிருந்த சோழர்கால நாணயங்கள், பொலநறுவையில் கி.பி. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அரசு வெளியிட்ட நாணயங்கள், மாமன்னன் ஸ்ரீ பராக்கிரமபாகு வெளியிட்ட நாணயங்கள் போன்றவை இங்குக் காணக்கிடைக்கின்றன.
தமிழர் பண்பாட்டில் தனியிடம் பெறுவது மரபு விளையாட்டுகளாகும். நெடுங்காலமாக மக்கள் வாழ்வியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் மரபு விளையாட்டுக்களான பல்லாங்குளி, தாயம் ஆகிய விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் விளையாட்டுக்கருவிகளும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையை ஆண்ட இறுதி மன்னன் எனக் கருதப்படும் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுடைய (கி.பி. 1798 - கி.பி.1815) மனைவி வெங்கடராஜம்மாள் தேவியுடைய உருவப்படமும் இங்குக் காட்சிக்கு உள்ளது. அக்காலத்தில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் வாரிசான இவர் கண்டி மன்னனை மணந்து மகாராணியாக 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியத்தை வரைந்தவர் வில்லியம் டேனியல் (William Daniel 1769 - 1837) என்பவர். இதன் முதல் பிரதி 1800களில் வரையப்பட்டதாகும். இங்கு அந்த ஓவியம் பாதுகாக்கப்படுகின்றது. நேரில் ஒருவரைக் காண்பதுபோல அச்சு அசல் மாறாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓவியமாகத் திகழ்கின்றது.
பரிசாக வழங்கப்பட்ட பிஜி நாட்டின் பண்பாட்டுச் சடங்கில் பயன்படுத்தப்படும் சடங்குப் பொருள் ஒன்றும் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இரு புறமும் கயிறு இணைக்கப்பட்டுள்ள கடற்பன்றியின் தந்தத்தினால் செய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பாகும் இது. இது பிஜி நாட்டில் அரசுத்தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களால் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருளாகும். இதனை பிஜித் தீவின் திருமதி லின் புறூகன் என்பவர் 30.9.1950 அன்று பரிசாக வழங்கி இருக்கின்றார் என்ற தகவலும் இங்குள்ளது.
இங்குள்ள அரும்பொருள் சேகரிப்புகளில் மனிதர்களைத் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்ட பயன்பாட்டிலிருந்த மரப்பபல்லக்குகளும் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நமச்சிவாயம் மாரிமுத்து என்பவர் பயன்படுத்திய மரப்பலகை இது. இவர் மூளாய் யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்ந்தவர் என்றும், யாழ்ப்பாணம் திரு.வி.தாமோதரம் பிள்ளை என்பவரிடமிருந்து 16.9.1963 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது என்றும் குறிப்புகள் சொல்கின்றன. இங்குள்ள இன்னொரு பல்லக்கு பெண்களைத் தூக்கி செல்ல பயன்படுத்தப்பட்ட பல்லக்கு. இதனைப் பயன்படுத்தியவர் அச்சுவேலி மாப்பாண முதலியார் என்பவர் என்றும், யாழ்ப்பாணத்தில் 1720 ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்த ஒரு பல்லக்கு என்ற குறிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனை அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாப்பாண முதலியாரின் கொள்ளுப்பேரன் திக்கம் செல்லையா என்பவர் 1948ஆம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வழங்கியிருக்கின்றார். இப்படி இன்னும் சில அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திலே உள்ளன.
யாழ்ப்பாணத்தின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் இந்தத் தொல்பொருள் அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள அரும் பொருட்கள் அனைத்திற்கும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் விளக்கக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிரான நீண்ட கால போரின் போது ஏற்பட்ட சேதங்களின் போதும் போருக்குப் பின்னரும் சீர்செய்யப்பட்டு இந்தத் தொல்பொருட்காட்சி சாலையைப் பராமரித்த ஒவ்வொருவரது தன்னலமற்ற செயலும் வரலாற்றில் போற்றுதலுக்குரியது. இதன் இப்போதைய கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தொழில்நுட்ப மேம்பாடுகளும் செய்யப்பட்டு இந்த அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட வேண்டும்.
விதம் விதமான அலங்காரச் சங்குகள், பனையோலை கீற்றினாலும், எலுமிச்சை மரத்தின் வேரினாலும் செய்யப்பட்ட அலங்கார விசிறிகள், பல்வேறு வடிவங்களிலான மண்பாண்டங்கள் போன்றவற்றை இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு வாய்களைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்ட மண்பானை ஒன்று இங்கு உள்ளது. இது ஒரு வகையான இசைக்கருவி என்ற தகவல் அங்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நாகர்கள் பண்பாட்டினை விளக்கும் சான்றாக, நாகங்கள் பொறிக்கப்பட்ட பண்டைய சின்னங்களின் சேகரிப்புக்களும், மரத்தினால் ஆன அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த காசுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி. 16லிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த கண்டி பேரரசின் வெள்ளிக்காசுகள், அரச சின்னம் அழுத்திச் செதுக்கப்பட்ட வெள்ளிக்காசுகள், பண்டைய சேரர் கால நாணயங்கள், கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜசோழன் காலத்தில் தயாரிக்கப்பட்டு புழக்கத்திலிருந்த சோழர்கால நாணயங்கள், பொலநறுவையில் கி.பி. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அரசு வெளியிட்ட நாணயங்கள், மாமன்னன் ஸ்ரீ பராக்கிரமபாகு வெளியிட்ட நாணயங்கள் போன்றவை இங்குக் காணக்கிடைக்கின்றன.
தமிழர் பண்பாட்டில் தனியிடம் பெறுவது மரபு விளையாட்டுகளாகும். நெடுங்காலமாக மக்கள் வாழ்வியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் மரபு விளையாட்டுக்களான பல்லாங்குளி, தாயம் ஆகிய விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் விளையாட்டுக்கருவிகளும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையை ஆண்ட இறுதி மன்னன் எனக் கருதப்படும் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுடைய (கி.பி. 1798 - கி.பி.1815) மனைவி வெங்கடராஜம்மாள் தேவியுடைய உருவப்படமும் இங்குக் காட்சிக்கு உள்ளது. அக்காலத்தில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் வாரிசான இவர் கண்டி மன்னனை மணந்து மகாராணியாக 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியத்தை வரைந்தவர் வில்லியம் டேனியல் (William Daniel 1769 - 1837) என்பவர். இதன் முதல் பிரதி 1800களில் வரையப்பட்டதாகும். இங்கு அந்த ஓவியம் பாதுகாக்கப்படுகின்றது. நேரில் ஒருவரைக் காண்பதுபோல அச்சு அசல் மாறாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓவியமாகத் திகழ்கின்றது.
பரிசாக வழங்கப்பட்ட பிஜி நாட்டின் பண்பாட்டுச் சடங்கில் பயன்படுத்தப்படும் சடங்குப் பொருள் ஒன்றும் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இரு புறமும் கயிறு இணைக்கப்பட்டுள்ள கடற்பன்றியின் தந்தத்தினால் செய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பாகும் இது. இது பிஜி நாட்டில் அரசுத்தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களால் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருளாகும். இதனை பிஜித் தீவின் திருமதி லின் புறூகன் என்பவர் 30.9.1950 அன்று பரிசாக வழங்கி இருக்கின்றார் என்ற தகவலும் இங்குள்ளது.
இங்குள்ள அரும்பொருள் சேகரிப்புகளில் மனிதர்களைத் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்ட பயன்பாட்டிலிருந்த மரப்பபல்லக்குகளும் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நமச்சிவாயம் மாரிமுத்து என்பவர் பயன்படுத்திய மரப்பலகை இது. இவர் மூளாய் யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்ந்தவர் என்றும், யாழ்ப்பாணம் திரு.வி.தாமோதரம் பிள்ளை என்பவரிடமிருந்து 16.9.1963 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது என்றும் குறிப்புகள் சொல்கின்றன. இங்குள்ள இன்னொரு பல்லக்கு பெண்களைத் தூக்கி செல்ல பயன்படுத்தப்பட்ட பல்லக்கு. இதனைப் பயன்படுத்தியவர் அச்சுவேலி மாப்பாண முதலியார் என்பவர் என்றும், யாழ்ப்பாணத்தில் 1720 ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்த ஒரு பல்லக்கு என்ற குறிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனை அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாப்பாண முதலியாரின் கொள்ளுப்பேரன் திக்கம் செல்லையா என்பவர் 1948ஆம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வழங்கியிருக்கின்றார். இப்படி இன்னும் சில அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திலே உள்ளன.
யாழ்ப்பாணத்தின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் இந்தத் தொல்பொருள் அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள அரும் பொருட்கள் அனைத்திற்கும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் விளக்கக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிரான நீண்ட கால போரின் போது ஏற்பட்ட சேதங்களின் போதும் போருக்குப் பின்னரும் சீர்செய்யப்பட்டு இந்தத் தொல்பொருட்காட்சி சாலையைப் பராமரித்த ஒவ்வொருவரது தன்னலமற்ற செயலும் வரலாற்றில் போற்றுதலுக்குரியது. இதன் இப்போதைய கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தொழில்நுட்ப மேம்பாடுகளும் செய்யப்பட்டு இந்த அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment